தடுப்பு காவல் சட்டத்தில் 2 பேர் கைது

தடுப்பு காவல் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2021-10-23 16:51 GMT
விழுப்புரம்,

மேல்மலையனூர் நாராயணமங்கலம் மேல்செவலாம்பாடி பெரியார் தெருவை  சேர்ந்தவர் பரசுராமன் . இவருடைய மகன் அண்ணாமலை (வயது 29). இவர் மீது சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. 

இவரது இத்தகைய நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா, அவரை  தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் மோகன் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்ணாமலையை கைது செய்ய உத்தரவிட்டார். 

இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள  அண்ணாமலையை தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

இதேபோன்று கொடுக்கன்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்த கொடுக்கண்குப்பம் குமார் என்கின்ற குமார் (37) என்பவரது  மீதும் சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்குகள் உள்ளதால், அவரையும் போலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்