இருதரப்பினர் தகராறு;2 பேர் கைது

இருதரப்பினர் தகராறு;2 பேர் கைது

Update: 2021-10-23 16:54 GMT
பரமக்குடி
பரமக்குடி அருகே உள்ள நென்மனி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (30). ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் நென்மேனி கிராமத்திற்கு சென்னுள்ளார். அப்போது அருள்நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், குமார் உள்பட 3 பேர் குமரேசனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். அவர் கொடுத்த புகாரின்படி பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். அதேபோல் குமரேசன், கார்த்திக், சதீஷ்குமார் ஆகிய மூன்று பேரும் சாதி பெயரை சொல்லி திட்டியதாக குமார் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், சதீஷ் குமார் இருவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்