பெண்ணை பாட்டிலால் குத்தியவர் கைது

பெண்ணை பாட்டிலால் குத்தியவர் கைது

Update: 2021-10-23 17:56 GMT
தொண்டி
திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி அருகே உள்ள பனிச்சகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமணி. இவரது மனைவி காளியம்மாள் (வயது 42). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த  கருணாநிதி(51) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காளியம்மாளின் வயலில் மாடுகள் பயிர்களை மேய்ந்துள்ளது. இதனால்காளியம்மாள் சத்தம் போட்டுள்ளார். அதற்கு கருணாநித, காளியம்மாளை அசிங்கமாக பேசியதுடன் உடைந்த பாட்டிலால் குத்தியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த காளியம்மாள் எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்