81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் 81 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 81ஆயிரத்து 471 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 29,287பேர் முதல் தவணைதடுப்பூசியும், 52,184 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 15 லட்சத்து 50 ஆயிரத்து 893 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 10 லட்சத்து 80 ஆயிரத்து 293பேர் முதல் தவணை தடுப்பூசியும், 4 லட்சத்து 70 ஆயிரத்து 600 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.