மோட்டாா் சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்து பெண் பலி

மோட்டாா் சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தார்.

Update: 2021-10-23 21:40 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் ஆதிதிராவிடர் தெருவை சோந்தவர் ராமர்(வயது 27). டிரைவர். இவரது மனைவி மாலதி(23). இவர்களுக்கு ஒரு வயதில் அஸ்வந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை மாலதியின் சொந்த ஊரான ரெங்கநாதபுரத்தில் இருந்து மனைவி மற்றும் குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ராமர் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர்-துறையூர் சாலையில் ஈச்சம்பட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மாலதி உயர் ரத்த அழுத்தம் காரணமாக திடீரென்று தலைசுற்றி மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாலதியை மீட்ட ராமர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு மாலதியை பரிசேரித்த டாக்டர்கள் ஏற்கனவே, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்