திருமயம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-24 17:59 GMT
திருமயம்:
மாணவி தற்கொலை 
திருமயம் அருகே வலைசேரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி இவரது மகள் அழகேஸ்வரி (வயது 13). இவர், ராங்கியத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-வகுப்பு படித்து வந்தார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. இதன்பிறகு அரை மணி நேரம் கழித்து அழகேஸ்வரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்