சாத்தூர்,
மேட்டமலை அருகே சாத்தூர் - சிவகாசி சாலையில் நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள பட்டாசு கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த மேட்டமலையை சேர்ந்த பரமசிவம் (வயது 56) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.