தூத்துக்குடி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

தூத்துக்குடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2021-10-27 10:24 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டாம்புளியை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருடைய மகன் விக்கி என்ற விக்ரம் (வயது 19). இவர் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விக்ரமை கைது செய்தார்.

மேலும் செய்திகள்