மாணவ-மாணவிகளுக்கு பரிசு
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காரியாபட்டி,
காரியாபட்டி போலீசார் சார்பில் காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ேஜாஸ் தலைமையிலும், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் துணை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.