பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஊர்வலம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

Update: 2021-10-30 19:58 GMT
குன்னம்:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வையும், மத்திய அரசையும் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குன்னத்தில் நேற்று சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. கட்சியின் வேப்பூர் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். குன்னம் பஸ் நிலையத்தில் தொடங்கிய சைக்கிள் ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்