மாமல்லபுரம் அருகே வாகனம் மோதி வாலிபர் சாவு

மாமல்லபுரம் அருகே வாகனம் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

Update: 2021-10-31 05:33 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மாமல்லபுரம் நோக்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். புதுச்சேரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். கருப்பு நிற கட்டம் போட்ட சட்டையும், வெள்ளை நிற பேண்டும் அணிந்து காணப்பட்ட அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட எந்த அடையாளமும் தெரியவில்லை.

தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்று வாகனம் மோதி இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்