சிங்கம்புணரி,
சிங்கம்புணரி நகர் பகுதியில் நெடுஞ் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சிங்கம்புணரி நகரில் உள்ள காசிப்பிள்ளை நகர், குறிஞ்சி நகர், முத்துவடுக சுவாமி நகர், வி.எஸ்.எஸ். காலனி ஆகிய பகுதிகளில் இன்று (திங்கட் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின் உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.