வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

பழவூர் அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-31 19:55 GMT
வடக்கன்குளம்:
பழவூர் அருகே பிள்ளையார்குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ் லிங்கம் (வயது 47). கீரை வியாபாரியான இவர், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் விஷம் குடித்தார். அவரை மீட்டு லெவிஞ்சிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுரேஷ் லிங்கம் இறந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்