வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2021-11-03 22:35 GMT
நெல்லை:
களக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவதாசன் மகன் பாலாஜி என்ற ஞான பாலாஜி (வயது 33). இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால், அவரை களக்காடு போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாலாஜியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று பாலாஜியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை சிறையில் போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்