கட்டிட தொழிலாளி சாவு

மோட்டாரை இயக்க சென்ற கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-11-05 16:57 GMT
தொண்டி, 
திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள கீழ்க்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது60). கொத்த னார் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வீட்டில் உள்ள மின்சார மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அவர் திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை அவரது குடும்பத்தினர் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் தொண்டி  போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத் தனர்.மேலும் சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். 

மேலும் செய்திகள்