இளநீரில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

இளநீரில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-11-08 20:24 GMT
துவரங்குறிச்சி
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள பெத்தாக்கோன்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 32) கூலித் தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனம் உடைந்த திருப்பதி நேற்று இளநீரில் விஷத்தைக் கலந்து குடித்து தனது தோட்டத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்