விபத்தில் காயம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் சாவு

விபத்தில் காயம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-11 19:49 GMT
நெல்லை:

பாளையங்கோட்டை சந்தனமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 63). முன்னாள் ராணுவ வீரர்.
இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளகோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.

இதில் கீழே விழுந்த அண்ணாதுரை பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்