திருத்தணி அருகே 2 ஏரிகளில் தண்ணீர் கசிவா?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருத்தணி அருகே சூரிய நகரம் மற்றும் செருக்கனூர் ஆகிய ஏரிகள் நிரம்பி உள்ளன.

Update: 2021-11-12 14:44 GMT
இந்த ஏரிகளில் தண்ணீர் கசிவதாக திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா, தாசில்தார் ஜெயராணி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இந்த 2 ஏரிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது ஏரி கரைகள் நன்றாக உள்ளதாகவும், தண்ணீர் கசிவு எதுவும் இல்லை என்றும் அவர்கள் கண்டறிந்தனர். 

இருந்த போதிலும் முன்னெச்சரிக்கையாக 2 ஏரிக்கரைகளிலும் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர். மேலும் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்று அவர்களுக்கு தைரியம் சொன்னார்கள்.

மேலும் செய்திகள்