விபத்தில் தொழிலாளி சாவு
தேனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீேழ விழுந்து தொழிலாளி பலியாகினார்.
தேனி:
தேனி அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டி ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் ராமர் (வயது 46). கூலித்தொழிலாளி. கடந்த 9-ந்தேதி இவர் தனது மோட்டார் சைக்கிளில் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.