இடுப்பில் சொருகி வைத்த மதுபாட்டில் உடைந்து விவசாயி சாவு
இடுப்பில் சொருகி வைத்த மதுபாட்டில் உடைந்து குத்தி விவசாயி உயிரிழந்தார்.
தொண்டி,
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா சருகணி கிராமத்தை சேர்ந்தவர், சந்திரன் (வயது37). விவசாயி. இவர் சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே உள்ள கடம்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு குடிபோதையில் நடந்து சென்ற சந்திரன் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சந்திரன் இடுப்பில் சொருகி வைத்திருந்த மதுபான பாட்டில் உடைந்து குத்தியதில் படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவரை தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாடானை போலீசார் அவரது உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.