மான் மீட்பு

தாயில்பட்டி அருகே மானை உயிருடன் மீட்டனர்.

Update: 2021-11-18 19:41 GMT
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி ஊராட்சியை சேர்ந்த அம்பேத்கர் காலனி கிழக்கு தெருவில் காட்டில் இருந்து தப்பி வந்த மான் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த மானை நாய்கள் விரட்டின. இதையடுத்து அப்பகுதி மக்கள் மானை மீட்டு பத்திரமாக தாயில்பட்டி வருவாய் ஆய்வாளர் சாரதா தேவியிடம் ஒப்படைத்தனர். சாரதாதேவி சிவகாசி வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு சிவகாசி கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்