திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-21 08:13 GMT
ஆவடி, 

திருமுல்லைவாயல் அடுத்த தந்தை பெரியார் நகர், எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் நாராயணராஜ். இவருடைய மகள் சோபனா (வயது 22). இவர், டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சோபனாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சோபனா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சோபனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்