காவிரி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

காவிரி ஆற்றில் மூழ்கி முதியவர் பாிதாபமாக இறந்தார்

Update: 2021-11-22 18:28 GMT
கரூர்
கரூர்
கரூர் அருகே உள்ள பெரிய வரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவர் நேற்று முன்தினம் கரூர் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்