செங்கல்சூளை தொழிலாளியை தாக்கி மோட்டார் சைக்கிள் செல்போன் பறிப்பு

செங்கல்சூளை தொழிலாளியை தாக்கி மோட்டார் சைக்கிள் செல்போன் பறிப்பு

Update: 2021-11-24 17:06 GMT
விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள பெரியசெவலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள தெள்ளிப்பட்டு என்ற கிராமத்தில் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றபோது விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி பஸ் நிறுத்தம் அருகில் 20 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள், மணிகண்டனிடம் லிப்ட் கேட்பதுபோல் கேட்டு அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளையும், அவரது செல்போனையும் பறித்துச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்