காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகா மாந்தோப்பு கிராமத்தில் காட்டுப்பகுதியில் மான் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் மல்லாங்கிணறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் இறந்து கிடந்த மானை கால்நடை டாக்டர் மூலம் பிரேத பரிசோதனை செய்து காட்டுப்பகுதியில் புதைத்தனர்.