காரிமங்கலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

காரிமங்கலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-25 04:57 GMT
காரிமங்கலம்:
காரிமங்கலம் அடுத்த அத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சாருமதி (வயது 22). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில்  வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சாருமதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி  அவர்நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்