நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் சேகர்(வயது 54). காய்கறி வியாபாரி. இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவளது தாயார் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சேகரை கைது செய்தனர்.