சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; வாலிபர் கைது

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-25 17:47 GMT
செஞ்சி, 

செஞ்சி அருகே சத்தியமங்கலம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூங்காவனம் ஆலம்பூண்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுபாஷ்(வயது 26) என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூங்காவனத்திடம் தகராறு செய்து அவரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுபாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்