மழைநீர் புகுந்தது

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

Update: 2021-11-25 17:58 GMT
சிங்கம்புணரி, 
சிங்கம்புணரி பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சிங்கம் புணரி மேலத்தெரு பகுதியில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.இந்த பகுதிகளில் உள்ள கால்வாய்கள் நிரம்பி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கால்வாய் அருகில் தாழ்வாக உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வீடுகளுக்குள் இருந்தவர்கள் வெகு நேரம் மழை நீர் வடிய காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதேபோல் வேங்கை பட்டி சாலை குறிஞ்சி நகர் பகுதியில் கால்வாய்கள் நிரம்பியநிலையில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் செய்திகள்