திருமயம் அருகே ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பஸ் மோதி பலி

திருமயம் அருகே ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தனியார் பஸ் மோதி பலியானார்.

Update: 2021-11-25 18:36 GMT
திருமயம்:
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி
புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 67) சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து திருமயம் அருகே நமணசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருமயம் நோக்கி சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் படுகாயமடைந்த கருப்பையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார். இது குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்