இரு தரப்பினர் ஏற்பட்ட மோதல் காரணமாக 9 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் ஏற்பட்ட மோதல் காரணமாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

Update: 2021-11-25 20:58 GMT
திருச்சி
திருச்சி உறையூர் பாக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 25). இவருடைய உறவினர் சிராஜூதீன்(54). முதல் தளத்தில் அசாருதீனும், கீழ் தளத்தில் சிராஜூதீனும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்கனவே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கைகலப்பானது. அப்போது அசாருதீனை சிராஜூதீன், அவருடைய மனைவி அன்சல்சல்மா (44), மகன் முகமது ஆரீப் (19) மற்றும் 2 மகள்கள் சேர்ந்து உருட்டுக்கட்டை மற்றும் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபோல, அன்சல் சல்மாவை அசாருதீன், மல்லிகாபானு (42), நர்கீஸ்பானு (41), முத்துகிரபேகம் (45) ஆகியோர் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்