2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி,
சின்னசேலம் அருகே பைத்தந்துறை கிராமத்தை சேர்ந்தவர் துடுக்கு சேகர் (வயது 63), சங்கராபுரம் அருகே விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் (40). சாராயம் விற்றது தொடர்பாக இவர்களை சின்னசேலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்ந்து சாராயம் கடத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்ததனர். இவர்களின் இத்தகையை செயல்களை தடுக்கும்பொருட்டு துடுக்குசேகர், ஜோசப் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் பரிந்துரை செய்தார்.
உத்தரவு
அதன்பேரில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் உள்ள துடுப்பு சேகர், ஜோசப் ஆகியோருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.