பாரதீய ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வாியை குறைக்க வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-11-29 16:47 GMT
திண்டுக்கல்: 

தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வாியை குறைக்க வலியுறுத்தி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதீய ஜனதா பட்டியல் அணி, வர்த்தகர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் மணிகண்டன், வர்த்தகர் அணி தலைவர் மோகன் பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினார்.

இதில் பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், பொதுச்செயலாளர் கார்த்திக் வினோத், வர்த்தகர் அணி மாநில செயலாளர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும். அதேபோல் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பா.ஜனதாவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்