பெருங்களூர் அருகே வரத்து வாரி தண்ணீரில் தவறி விழுந்து கொத்தனார் பலி

பெருங்களூர் அருகே வரத்துவாரி தண்ணீரில் தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-30 17:20 GMT
ஆதனக்கோட்டை:
கொத்தனார் பலி
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). கொத்தனார். வடகிழக்கு பருவ மழையினால் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் அவர் வீட்டின் அருகே உள்ள சிறிய வரத்து வாரியில் தண்ணீர் அதிகமாக சென்றது. குடிபோதையில் இருந்த சுரேஷ் வாரியை கடக்க முயன்ற போது, தண்ணீரில் தவறி விழுந்து  மூழ்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்