புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-12-01 17:43 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 884 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்