தடுப்பு கம்பி மீது மொபட் மோதி காவலாளி சாவு

தடுப்பு கம்பி மீது மொபட் மோதி காவலாளி உயிரிழந்தார்

Update: 2021-12-02 20:06 GMT
திருவெறும்பூர்
திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் கணேசன்(வயது 38). இவர் துவாக்குடி அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது மொபட்டில் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அண்ணா வளைவு அருகே வந்தபோது அங்கிருந்த தடுப்புக்கம்பி மீது ெமாபட் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்