சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Update: 2021-12-03 17:53 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவில் வடசேரி யாதவர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 20), ஏ.சி. மெக்கானிக். இவருக்கும் நாகர்கோவிலை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். இந்த நிலையில் சிறுமியை, அருண்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்