பெண் தற்கொலை

விருதுநகர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-03 19:51 GMT
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள கல்போது கிராமத்தை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி கீர்த்தனா (வயது 23). கடந்த 2020-ல் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. கிருபாகரன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள கீர்த்தனாவின் தந்தை பாபு செலவிற்கு பணம் அனுப்பி வந்ததாராம். தொடர்ந்து கணவன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மனவேதனை அடைந்த கீர்த்தனா நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி கீர்த்தனாவின் தந்தை பாபு  (45) கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்