மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

சிந்தாமணிபட்டியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.

Update: 2021-12-04 18:55 GMT
தரகம்பட்டி,
மின்சாரம் பாய்ந்தது
கடவூர் தாலுகா கொள்ளு தண்ணிபட்டியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 45), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சிந்தாமணிபட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்த மரங்களை அங்கமுத்து வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது மரக்கிளை ஒன்று எதிர்பாராதவிதமாக அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது சாய்ந்து விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து அங்கமுத்து தூக்கி வீசப்பட்டார்.
தொழிலாளி பலி
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அங்கமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைதொடர்ந்து அவரது உடல் பிரேத  பரிசோதனைக்காக கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்