பெண்ணை கொலை செய்த வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2021-12-07 15:04 GMT
கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி காந்திமதி (வயது 26). இவர் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் அரவிந்தன் என்கிற வீரமணி (23) உள்ளிட்ட 4 பேரை, திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா கைது செய்தார்.
கைதான அரவிந்தனின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அரவிந்தனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்தனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் அவரிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்