வீடு புகுந்து 6½பவுன் நகை திருட்டு

தேங்காப்பட்டணம் அருகே வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-12-08 21:28 GMT
புதுக்கடை, 
தேங்காப்பட்டணம் அருகே வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நகை திருட்டு
தேங்காப்பட்டணம் அருகே உள்ள கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மனைவி கிருஷ்ணகுமாரி. கிருஷ்ணகுமாரியுடன் அவருடைய தாயார் தங்கரத்தினம் வசித்து வந்தார். வீட்டின் மேல் மாடியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால், மாடி பகுதி திறந்தே இருந்தது. 
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தங்கரத்தினம் மேல் மாடியில் தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாடிப்பகுதி திறந்து இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
பின்னர், இதுகுறித்து புதுக்கடை போலீசில் கிருஷ்ணகுமாரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்