வீரபாண்டி கிராமத்தில் 2200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வீரபாண்டி கிராமத்தில் 2200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Update: 2021-12-31 17:56 GMT
திருக்கோவிலூர்

அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் போலீசார் சாராய வேட்டை நடத்தினர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் 2,200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் ராமு என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்