மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

வடமதுரை அருகே மின்சாரம் வாய்ந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2022-01-04 16:13 GMT

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கலைஞர் காலனியை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகன் மகேந்திரன் (வயது 15). இவன், வடமதுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தான். ஆனால் கடந்த 3 மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல், வடமதுரை தென்னம்பட்டி சாலையில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மகேந்திரன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை மகேந்திரன் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில், அவன் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தான். 

அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மகேந்திரன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்