ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் முன்பு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் சங்கத்தலைவர் வேல்முருகன் தலைமையில் பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், 8 மணிநேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் ராஜபாண்டி, சி.ஐடி.யு. மாவட்ட செயலாளர் தேவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.