குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2022-01-09 19:55 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மருதவீரன் (வயது 28). இவரது மனைவி செந்தமிழ்செல்வி. கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்த மருதவீரன் தற்போது சொந்த கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது தண்ணீரில் மூழ்கி மருதவீரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மருதவீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக செந்தமிழ்செல்வி கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்