வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபர் கைது

விளாத்திகுளத்தில் வீடு புகுந்து 11 பவுன் நகை, பணம் திருடிய பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-01-11 15:04 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் வீடு புகுந்து 11 பவுன் நகை- பணம் திருடிய பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெராக்ஸ் கடை உரிமையாளர்
விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கார்த்திகேயன் (வயது 40). இவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு திறந்த நிலையில், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாலிபர் கைது
கடந்த ஒரு ஆண்டாக குற்றாவளி கைது செய்யப்படவில்லை என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இதுதொடர்பாக கார்த்திகேயன் பக்கத்து வீட்டில் வசிக்கும் சீனிவாசன் மகன் விவேக்ராஜா (30) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கார்த்திகேயன் வெளியே செல்லும்போது வீட்டை பூட்டி விட்டு சாவியை வைத்திருக்கும் இடத்தை அறிந்து, கார்த்திகேயன் வெளியே சென்றிருந்தபோது வீட்டை சாவியால் திறந்து பீரோவை உடைத்து தங்கநகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 11 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்