பஸ்சில் பணம் திருடிய பெண் கைது

விருதுநகர் அருகே பஸ்சில் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-12 17:14 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சியைச் சேர்ந்தவர் கலைவாணி (வயது19). இவர் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக பஸ் ஏறிய போது பையில் இருந்த பர்சை திருடியதாக அதே பஸ்சில் ஏறிய பெண் ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த வள்ளி (50) என்பது தெரிய வந்தது. கலைவாணியின் பர்சில் இருந்து திருடிய ரூ. 510 கைப்பற்றிய விருதுநகர் மேற்கு போலீசார் வள்ளியை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே வள்ளி மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்