ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் நோய் பரவல் 4.6 சதவீதமாக இருந்தது. நேற்று 7 சதவீதமாக உயர்ந்தது.