சாவிலும் இணை பிரியாத தம்பதி கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

சாவிலும் இணை பிரியாத தம்பதி கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

Update: 2022-01-12 17:31 GMT
ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே உள்ள ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 55). விவசாயியான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு பால்ராஜ் பரிதாபமாக இறந்தார். 

கணவர் இறந்த செய்தியை கேட்ட பால்ராஜின் மனைவி சென்னம்மாள்(50) என்பவரும் அதிர்ச்சியில் திடீரென மயங்கி விழுந்து  இறந்தார். கணவர் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் இறந்த சம்பவம் ஓடியந்தல் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் செய்திகள்