108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா குவா’

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா குவா’

Update: 2022-01-12 17:53 GMT
ஆற்காடு
ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

வேலூர் அடுக்கம்பாறையை அடுத்த சப்தலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி கர்ப்பிணியாக இருந்தார். இதனையொட்டி பிரசவசத்துக்காக கலவையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்படவே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அவரை மருத்துவ உதவியாளர் சரண்யாவுடன் டிரைவர் பாக்கியராஜ் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். சத்துவாச்சாரி பகுதியில் ஆம்புலன்ஸ் சென்றபோது மகேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே ஆம்புலன்ஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

 அங்கேயே மருத்துவ உதவியாளர் சரண்யா அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். அதில் மகேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.பின்னர் தாயும் சேயும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்கள் கண்காணிப்பில் தாயும் சேயும் நலமாக உள்ளதாக தெரிவ்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்